News May 20, 2024

தயார் நிலையில் மீட்புப் படைகள்

image

அதி கனமழை அறிவிப்பால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வானிலை மையம் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 20 செ.மீ.,க்கு மேல் மழைப்பொழிவு இருக்கும் என்பதால், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Similar News

News August 15, 2025

தலைமுறைகள் கடந்து தாக்கம் ஏற்படுத்திய ரஜினி: PM வாழ்த்து

image

திரையுலகில் ரஜினி 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை PM மோடி வாழ்த்தியுள்ளார். திரைப்படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து தலைமுறைகள் கடந்தும் ரஜினி மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அவரது திரைப்பயணம் சிறப்பு மிக்கதாக இருப்பதாகவும் PM மோடி தெரிவித்துள்ளார். மேலும், இனிவரும் காலங்களிலும் தொடர் வெற்றிகளை பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும் வாழ்த்தியுள்ளார்.

News August 15, 2025

உடலின் கழிவுகளை நீக்கும் லெமன் டீ

image

லெமன் டீ அருந்தும்போது *எலுமிச்சையில் உள்ள நுண்சத்துகள் அழற்சியை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் * இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், & தாமிர சத்துகள் மூளையை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தரும், மனஅழுத்தம் நீங்கவும் உதவும் *மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது, இதனால் எடை குறையும் *உடலின் நச்சுகள், கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும். SHARE IT!

News August 15, 2025

திமுகவின் வரலாறு இப்படிதான்: அண்ணாமலை சாடல்

image

குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பதே திமுக வரலாறு என அண்ணாமலை சாடியுள்ளார். நாகர்கோவில் திமுக நிர்வாகி ராஜன், கோயிலுக்கு ஒதுக்கிய ஒன்றரை கோடி நிதியை சுருட்டி விட்டதாகவும், இது குறித்து DVAC-ல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சமூக விரோதிகளை வளர்த்துவிடும் திமுகவிற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!