News May 20, 2024

காணாமல் போன தமிழர்களின் கதி என்ன?

image

இலங்கையில் 1983 – 2009 வரை காணாமல் போன 1.40 லட்சம் தமிழர்களின் நிலை குறித்து ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், மாயமானவர்களின் எண்ணிக்கையை அறிவிப்பதுடன், இதற்கு சிங்கள ராணுவம் & பாதுகாப்பு படையினர்தான் காரணம் என்பதை ஏற்றுக்கொண்டு, இலங்கை அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். மனித உரிமை செயல்பாட்டாளர்கள் காணாமல் ஆக்கப்படுதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 19, 2026

ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் திமுக கூட்டணி பஞ்சாயத்து

image

புதுச்சேரியில் திமுக-காங்., கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையில் நேற்று புதுச்சேரியிலுள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்.,- திமுகவினர் போட்டிபோட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், ஓரிரு நாள்களில் தொகுதிப்பங்கீடு உள்ளிட்டவை முடிந்துவிடும் எனவும் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

News March 19, 2026

விடுமுறை .. சற்றுமுன் புதிய அறிவிப்பு வெளியானது

image

தமிழக பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் அரசு & தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறையை ECI வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை விடுமுறை அளிக்கவில்லையென்றால் 1950 என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.

News March 19, 2026

சாதி இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும்: நாதக வாக்குறுதி

image

நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், *சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும். *தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி. *மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை. *நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் உள்ளிட்ட <<19423818>>பல வாக்குறுதிகள்<<>> இடம் பெற்றுள்ளன.

error: Content is protected !!