News May 20, 2024
சினிமா இயக்குநர்கள் அகங்காரம் பிடித்தவர்கள்

தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் அகங்காரம் பிடித்தவர்கள் என்று கஜினி பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “வடக்கே ஒரு நாள் சம்பளமாக ₹1 லட்சம் தருவார்கள் எனில், தெற்கே மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் தருவார்கள். ஆனால், தென்னக இயக்குநர்கள் அவர்கள் அருகே கூட நம்மை அண்டவிட மாட்டார்கள். அவர்கள் ஈகோ மிக்கவர்கள்” என சாடினார்.
Similar News
News March 7, 2026
அடுத்தவர் உழைப்பில் குளிர்காயும் திமுக: அதிமுக

சைதை துரைசாமியின் ‘மனிதநேயம்’ பயிற்சி மையத்தில் பயின்று வெற்றிபெற்ற மாணவர்களை ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வென்றதாக கூறி விளம்பரம் செய்வது வெட்கக்கேடு என அதிமுகவின் பாப்புலர் முத்தையா விமர்சித்துள்ளார். அடுத்தவர் உழைப்பில் குளிர்காயும் திமுக அரசு, விளம்பர அரசியல் செய்வதாக சாடிய அவர், மக்கள் வரிப்பணத்தை செலவழித்து பொய் விளம்பரம் செய்வதை விடுத்து, உண்மையான உழைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
News March 7, 2026
BREAKING: விஜய் மனைவி அடுத்த பரபரப்பு

நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரி, விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். லண்டனில் வசித்து வருவதால், சென்னையில் தனக்கு தனியாக வீடு இல்லை. நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலம் விஜய் தரப்பு மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ள அவர், விவாகரத்து வரை நீலாங்கரை வீட்டிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என விஜய்க்கு உத்தரவிட கோரியுள்ளார்.
News March 7, 2026
கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசின் உயரிய விருது!

கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசு ‘பைடி ஜெயராஜ்’ விருது அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டுக்கான Gaddar Telangana Film Awards சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. அதில், நடிகர் சிரஞ்சீவிக்கு NTR விருதும், நடிகை ரஷ்மிகாவுக்கு சிறந்த நடிகைக்கான(The Girlfriend) விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் கோலோச்சிய பைடி ஜெயராஜ், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர்.


