News May 19, 2024

49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு

image

மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. நாளை காலை 7 மணிக்கு 49 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உ.பி- 14, மகாராஷ்டிரா-13, மேற்குவங்கம்- 7, பிஹார்- 5, ஒடிசா- 5, ஜார்க்கண்ட்- 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இத்துடன், ஒடிசாவில் 35 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடக்கிறது.

Similar News

News March 8, 2026

எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு? EPS

image

எழுதாத பேனாவுக்கு கடலில் ₹82 கோடியில் சிலை வைக்க முயற்சிக்கின்றனர். எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு என EPS கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, கார் பந்தயத்துக்கு ₹100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறிய அவர், மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக இந்த அரசு செலவிட்டுள்ளது எனவும் விமர்சித்துள்ளார். மேலும், திமுக அரசை அகற்றுவதுதான் மக்களின் கனவு எனவும் பேசியுள்ளார்.

News March 8, 2026

இந்த App உங்க ஃபோன்ல இருக்கா? முடிஞ்சுது போங்க!

image

ஓடிடி-யில் படம் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டதால் இதற்காகவே நெட்பிளிக்ஸ், ப்ரைம் அக்கவுண்ட்டுகளுக்கு பணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இதற்கு பணம் செலுத்த முடியாதவர்கள், அதில் வரும் படங்களை இலவசமாக பார்க்கவேண்டும் என்பதற்காக Playstore-ல் இல்லாத ‘Net Mirror’ போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். இதுபோன்ற செயலிகள் உங்கள் ஃபோனை ஹாக் செய்வதோடு அதிலுள்ள தகவல்களை திருடலாம். உஷார்!

News March 8, 2026

கூட்டணி விவகாரத்தில் கோட்டை விட்ட தவெக!

image

பவர் ஷேரிங் ஆப்சனை கொடுத்தும் எந்த கட்சியும் நம்முடன் வராதது ஏன் என மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விஜய்க்கு ஆதரவாக பேசிவந்த TTV தினகரன் முதல் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என பேசிய பிரேமலதா வரை எதிரெதிர் அணியில் ஐக்கியமாகினர். கடைசி வரை பேசி வந்த காங்கிரஸும் திமுகவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்துவிட்டது. இதனால், நாம் கோட்டை விட்டது எங்கே என விஜய் விளக்கம் கேட்டுள்ளாராம்.

error: Content is protected !!