News May 19, 2024
சென்னையில் ஆசிட் வீசி தாக்குதல்

சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கக்கூடிய மக்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், குழந்தைகள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆள்நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
பாராட்டு விழாவை நம்ப முடியவில்லை: இளையராஜா

இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்கு <<17700409>>பாராட்டு விழா <<>>நடத்தியது தமிழக அரசுதான் என இளையராஜா தெரிவித்தார். சிம்பொனி இசையமைக்க செல்லும் முன்னே CM ஸ்டாலின் நேரில் வாழ்த்தியதாக கூறிய அவர், இன்று பாராட்டு விழா நடத்தியதை நம்ப முடியவில்லை என கூறினார். தனக்கு இசைஞானி என்ற பட்டத்தை முன்னாள் CM கருணாநிதிதான் கொடுத்ததாகவும் நினைவு கூர்ந்தார்.
News September 14, 2025
ஒரு நாள் லீவு போடுங்க… ஏன் தெரியுமா?

மாதத்தில் ஒரு நாளோ அல்லது உங்கள் துணைவர் எதிர்பார்க்காத ஒரு நாளிலோ லீவு எடுத்து, அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துங்கள். வழக்கமான கடமைகளை ஒருநாள் தள்ளி வையுங்கள். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து செல்லுங்கள். அது கடற்கரை, பூங்கா, சினிமா தியேட்டர் எந்த இடமாக வேண்டுமானாலும் இருக்கலாம். இருவரும் மனம்விட்டு ரிலாக்சாக பேசுங்கள். இது அன்றாட மனஅழுத்தங்களில் இருந்து விடுவித்து, உங்கள் உறவை வலுப்படுத்தும்.
News September 14, 2025
பாஜக அதிகாரத்தை பறிக்கிறது: விஜய்

தென் இந்தியாவின் அதிகாரத்தை பாஜக பறிக்கிறது என தேர்தல் பரப்புரையில் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். அரியலூர் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வாக்கு திருட்டு, தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுத்தார். பாஜக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதாகவும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் இந்தியாவிற்கு துரோகம் செய்கிறது எனவும் அவர் சாடினார்.