News May 19, 2024

ஆரஞ்ச் எச்சரிக்கை, சிவப்பு எச்சரிக்கை என்றால் என்ன? (1)

image

வானிலை மையத்தால் பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு என 4 வகை எச்சரிக்கை விடப்படுகிறது. மழை பொழிவின் அளவு குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தவே இதனை வானிலை மையம் செய்கிறது. இதில் பச்சை நிற எச்சரிக்கை எனில், மோசமான வானிலைக்கு வாய்ப்பு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையில்லை என்று பொருள்படும். மஞ்சள் நிற எச்சரிக்கை எனில், குறிப்பிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அர்த்தம்.

Similar News

News August 29, 2025

ரஷ்யாவுக்கு உக்ரைன் கொடுத்த பெரும் அடி

image

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளுக்கு எரிபொருள் வழங்கி வந்த ரஷ்யா, தற்போது உள்நாட்டு மக்களின் தேவைக்கே எரிபொருள் வழங்க முடியாமல் திணறி வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறும் உக்ரைன், அதேவேளையில் மற்றொரு புறம் சாதுர்யமாக காய்களை நகர்த்தி வருகிறது.

News August 29, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 442
▶குறள்: உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
▶ பொருள்: வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

News August 29, 2025

ஆயுள்காலம் அதிகரிக்க இதுதான் ஒரே வழி…

image

இந்தியாவின் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலத்தை 3.5 ஆண்டுகள் அதகரிக்கலாமாம். உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு குறைந்ததால், டெல்லி மக்களின் ஆயுள்காலம் 8.2 ஆண்டுகளாக அதிகரிக்கும் எனவும் சிகாகோ பல்கலையின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மாசு குறைந்து ஆயுட்காலம் அதிகரிக்க வாய்ப்பிருக்கா மக்களே?

error: Content is protected !!