News May 19, 2024
ஆரஞ்ச் எச்சரிக்கை, சிவப்பு எச்சரிக்கை என்றால் என்ன? (1)

வானிலை மையத்தால் பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு என 4 வகை எச்சரிக்கை விடப்படுகிறது. மழை பொழிவின் அளவு குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தவே இதனை வானிலை மையம் செய்கிறது. இதில் பச்சை நிற எச்சரிக்கை எனில், மோசமான வானிலைக்கு வாய்ப்பு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையில்லை என்று பொருள்படும். மஞ்சள் நிற எச்சரிக்கை எனில், குறிப்பிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அர்த்தம்.
Similar News
News March 15, 2026
வங்கி கணக்கில் மேலும் ₹3,000.. ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை ₹12,000-ல் இருந்து ₹15,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக அரசாணை வெளியாகியுள்ளது. அதில், பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியமும் ₹6,000-ல் இருந்து ₹7,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வீட்டு வசதி வாரியத்தில் அவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT
News March 15, 2026
தேர்தல் அறிவிப்பு.. ரயில் டிக்கெட்கள் காலி

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. இதையடுத்து, வாக்களிப்பதற்கு சொந்த ஊர் செல்வதற்காக பலரும் IRCTC-ல் டிக்கெட் புக் செய்து வருகின்றனர். குறிப்பாக ஏப்.21, ஏப்.22 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கான டிக்கெட்கள் கடகடவென காலியாகி வருகின்றன. டிக்கெட் புக் செய்யாதவர்களே முந்துங்க..
News March 15, 2026
கேரளாவில் ஏப்.9-ல் வாக்குப்பதிவு

TN, புதுச்சேரியை போல அண்டை மாநிலமான கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. 140 தொகுதிகள் கொண்ட கேரளாவில் ஏப்.9-ல் வாக்குப்பதிவும், மே.4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. 126 தொகுதிகள் கொண்ட அசாமில் ஏப்.9-ல் வாக்குப்பதிவும், மே.4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


