News May 19, 2024
அங்கன்வாடியில் போதையில் ரீல்ஸ்; ரூ.10 அபராதம்

வேலூர் திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரின் மகன் சரண், நண்பர்களுடன் வெங்கடாபுரம் அங்கன்வாடி மையத்தில் போதையில் புகைபிடித்தபடி கேங்க்ஸ்டர் தோரணையில் கத்திகளுடன் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டதற்காக ரூ.10, ரூ.200 மற்றும் ரூ.1,000 அபராதம் விதிப்பதற்கான ஐ.பி.சி 510, 290, 448 ஆகிய சாதாரண பிரிவுகளின்கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
Similar News
News September 13, 2025
UPI கட்டண வரம்புகள் விவரம்

தனிநபர்கள் நிறுவனங்களுக்கு UPI மூலம் பணம் செலுத்தும்(P2M) வரம்பு செப்.15 முதல் உயர்கிறது. அதன்படி, கிரெடிட் கார்டு பேமெண்ட்க்கு ஒரு பரிவர்த்தனைக்கு ₹5 லட்சம் (ஒரு நாளைக்கு ₹6 லட்சம்), பயணக் கட்டணம் -₹5 லட்சம், லோன் & EMI -₹5 லட்சம் (₹10 லட்சம்), முதலீடு & இன்ஷூரன்ஸ் -₹5 லட்சம் (₹10 லட்சம்), வரி -₹5 லட்சம், வங்கி சேவைகள் -₹5 லட்சம். எனினும், தனிநபர்களுக்கு அனுப்பும் வரம்பு ₹1 லட்சமாகவே தொடரும்.
News September 13, 2025
கதை விடாதீர்கள் MY DEAR CM சார்: விஜய்

மதுரை மாநாட்டில் CM ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு விஜய் பேசியது விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், அரியலூர் பரப்புரையில் அங்கிள் என்ற வார்த்தையை தவிர்த்த அவர், நையாண்டியாக சார் என ஸ்டாலினை குறிப்பிட்டார். மேலும், திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர், இதை பற்றி கேட்டால் கதை விடாதீர்கள் MY DEAR CM சார் எனவும் விஜய் கிண்டலாக பேசினார்.
News September 13, 2025
நாளை ஒரு நாள் மட்டுமே… Gpay, Phonepe-ல் மிகப்பெரிய மாற்றம்

செப்.15 முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான (P2M) <<17642370>>தினசரி வரம்பு<<>> ₹10 லட்சமாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரையே அனுப்ப முடியும். இதனால், இன்ஷூரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதை போக்கும் வகையில் இனி ஒருமுறைக்கு அதிகபட்சம் ₹5 லட்சம், ஒரு நாளைக்கு ₹10 லட்சம் என வரம்பு உயர்த்தப்படுகிறது.