News May 19, 2024
தி.மலை அருகே விபத்தில் இருவர் பலி

போளூர் அருகே கடலாடி பகுதியைச் சேர்ந்த அசன் பாஷா,, வெற்றிச்செல்வன் ஆகியோர் மூன்று சக்கர ஆட்டோவில் போளூர் பகுதியில் இருந்து வேலூர் சாலையில் பூண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது நேற்று இரவு வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பேருந்து மூன்று சக்கர வாகனத்தின் மீது மோதியதில் அசன் பாஷா, வெற்றிச்செல்வன் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 20, 2025
தி.மலையில் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் பெற வாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஆன்லைன் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்காக இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். <
News August 20, 2025
தி.மலையில் இ- ஸ்கூட்டர் மானியம் பெற வாய்ப்பு

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். *உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 20, 2025
தி.மலை கோயிலின் அரிய பெருமை தெரியுமா?

திருவணாமலைக்கு நவதுவாரபதி என்ற பெயர் உண்டு. நவம்- ஒன்பது, துவாரம் – வாயில்கள், பதி – அரசன். ராஜ கோபுரம், பேய் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், தெற்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், வடக்கு கட்டை கோபுரம் என இங்குள்ள 9 வாயில்களுக்கு அரசனாக சிவன் இருப்பதால் நவதுவாரபதி என அழைக்கப்படுகிறது. நம்ம திருவண்ணாமலை பெருமையை ஷேர் பண்ணுங்க