News May 19, 2024
ராமதாஸ் பற்றி அவதூறு பதிவிட்ட வாலிபர் கைது

சேலம், குரும்பப்பட்டி கிராமம், சின்னநாச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் கார்த்திக் (28). இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் டாக்டர் ராமதாஸ் குறித்து சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வைத்து அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News August 22, 2025
ரூ.59.19 லட்சம் அபராதம் – அதிகாரிகள் தகவல்

சேலம் சரகத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 1,232 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூபாய் 59.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும், 215 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விபத்தை ஏற்படுத்திய 77 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News August 22, 2025
7.5% இட ஒதுக்கீடு: சேலத்தில் 1,903 பள்ளி மாணவர்கள் பயன்!

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்காக, தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்புகள் உட்பட அனைத்துப் பட்டப் படிப்புகளுக்கும் பொருந்தும். அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் (2021-2025) 7.5% இட ஒதுக்கீடு மூலம் மொத்தம் 1,903 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News August 22, 2025
பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவு செய்ய சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 12.25 லட்சம் மானியத்தில் மாம்பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுவைச் சோ்ந்த விவசாயிகள் இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.