News May 19, 2024

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, வேலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News September 13, 2025

UPI கட்டண வரம்புகள் விவரம்

image

தனிநபர்கள் நிறுவனங்களுக்கு UPI மூலம் பணம் செலுத்தும்(P2M) வரம்பு செப்.15 முதல் உயர்கிறது. அதன்படி, கிரெடிட் கார்டு பேமெண்ட்க்கு ஒரு பரிவர்த்தனைக்கு ₹5 லட்சம் (ஒரு நாளைக்கு ₹6 லட்சம்), பயணக் கட்டணம் -₹5 லட்சம், லோன் & EMI -₹5 லட்சம் (₹10 லட்சம்), முதலீடு & இன்ஷூரன்ஸ் -₹5 லட்சம் (₹10 லட்சம்), வரி -₹5 லட்சம், வங்கி சேவைகள் -₹5 லட்சம். எனினும், தனிநபர்களுக்கு அனுப்பும் வரம்பு ₹1 லட்சமாகவே தொடரும்.

News September 13, 2025

கதை விடாதீர்கள் MY DEAR CM சார்: விஜய்

image

மதுரை மாநாட்டில் CM ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு விஜய் பேசியது விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், அரியலூர் பரப்புரையில் அங்கிள் என்ற வார்த்தையை தவிர்த்த அவர், நையாண்டியாக சார் என ஸ்டாலினை குறிப்பிட்டார். மேலும், திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர், இதை பற்றி கேட்டால் கதை விடாதீர்கள் MY DEAR CM சார் எனவும் விஜய் கிண்டலாக பேசினார்.

News September 13, 2025

நாளை ஒரு நாள் மட்டுமே… Gpay, Phonepe-ல் மிகப்பெரிய மாற்றம்

image

செப்.15 முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான (P2M) <<17642370>>தினசரி வரம்பு<<>> ₹10 லட்சமாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரையே அனுப்ப முடியும். இதனால், இன்ஷூரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதை போக்கும் வகையில் இனி ஒருமுறைக்கு அதிகபட்சம் ₹5 லட்சம், ஒரு நாளைக்கு ₹10 லட்சம் என வரம்பு உயர்த்தப்படுகிறது.

error: Content is protected !!