News May 19, 2024
கள்ள மவுனம் காக்கும் திமுக: இபிஎஸ் கொந்தளிப்பு

இடுக்கி, பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, அமராவதி அணைக்கு வரும் நீரைத்தடுக்க கேரள அரசு முயற்சிப்பதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு திமுக அடகு வைப்பதாக விமர்சித்த அவர், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.
Similar News
News March 21, 2026
குற்ற வழக்கு விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும்: ECI

குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் அதன் விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதற்காக ECI வரையறுத்துள்ள படிவங்களின்படி உறுதிமொழியினை, வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 2 நாள்களில் விளம்பரம் வெளியிடப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். வாக்குப்பதிவு முடிவதற்கு 2 நாள் முன்பு வரை 3 முறை வெவ்வேறு நாள்களில் விளம்பரம் வெளியிடப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
News March 21, 2026
Fatty Liver வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

வயதானவர்கள், மது பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இருந்துவந்த கொழுப்புக் கல்லீரல் (ஃபேட்டி லிவர்) நோய், தற்போது குழந்தைகளைக் கூட பாதிக்கிறது. இந்த நோய் வந்தால், பெரிதாக எந்த அறிகுறியும் தெரியாது என்பதே இதை இன்னும் கொடியதாக ஆக்குகிறது. எனவே இந்நோய் உங்களுக்கு வராமல் இருக்க, நோயில் இருந்து விடுபட நிபுணர்கள் கூறும் உணவுகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. பிறருக்கு இதை தவறாமல் SHARE செய்யுங்கள்.
News March 21, 2026
மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாட்டம்: அன்புமணி

TN-ன் சாபக்கேடு என்றால் அது திமுகவின் ஆட்சி என அன்புமணி விமர்சித்துள்ளார். தூத்துக்குடி, கோவை, மதுராந்தகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு போலீசாரின் மெத்தனமே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடும் போது, மக்கள் அஞ்சி நடமாடும் சூழல் இருந்தால், இதுநாடா அல்லது காடா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


