News May 19, 2024
ரெய்னாவின் சிபாரிசில்தான் விளையாட வாய்ப்பு கிடைத்தது

சுரேஷ் ரெய்னாவின் சிபாரிசில்தான் தனக்கு இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 2008இல் இந்திய எமர்ஜிங் அணியில் ஆடியபோது, ரிசர்வ் வீரராக இருந்த தன்னை, ரெய்னாதான் NZ அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறக்க வைத்தார் எனக் கூறிய கோலி, அந்தப் போட்டியில் சதம் அடித்த பின்னர்தான் தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்தது எனத் தெரிவித்தார்.
Similar News
News March 4, 2026
கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து… புதிய தேர்தல் அறிவிப்பு

மத்திய, மாநில அரசு வேலைகளில் இல்லாத குடும்பத்தினரின் குழந்தைகளின் மருத்துவம் பொறியியல் உள்பட அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்று விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் 50% கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
News March 4, 2026
கருணாநிதியால் கூட இதை செய்ய முடியல: விஜய்

தொடர்ந்து 2-வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே இல்லை என விஜய் பேசியுள்ளார். திமுகவை தொடர்ச்சியாக 2-வது முறை ஆட்சிக்கு கொண்டுவர கருணாநிதியால் கூட முடியவில்லை என்ற அவர், நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என தெரிந்தே திமுக வாக்கு கொடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மோசடி ஆட்சியில் முன்மாதிரியான ஆட்சி; முக்கியமான ஆட்சி என திமுக அரசு மீது விஜய் விமர்சனம் வைத்துள்ளார்.
News March 4, 2026
80 லட்சம் இந்திய WhatsApp கணக்குகள் நீக்கம்!

WhatsApp முக்கிய மார்க்கெட்டாக இருக்கும் இந்தியாவில் சுமார் 81,79,740 கணக்குகளை முடக்கி இருப்பதாக WhatsApp நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. WhatsApp பயனர்களின் புகார்கள், இந்திய அரசின் அறிவுறுத்தல்கள் & விதிமீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.


