News May 19, 2024
மதுரையில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை

மதுரை பரவையில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறி கடை நடத்தி வருபவர் கோபால். இவர் இன்று அதிகாலை கடையில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் கோபால் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மதுரை கூடல் புதூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 7, 2026
BREAKING மதுரை: பழனிவேல் தியாகராஜன் வேட்பு மனு ஏற்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
மதுரை: கேஸ் சிலிண்டருக்கு அதிக காசு கேட்டால்.. இத பண்ணுங்க

மதுரை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!
News April 7, 2026
மதுரை: தூக்கத்தில் இளைஞர் மரணம்; பெற்றோர் அதிர்ச்சி.!

பெருங்குடி அருகே பரம்புபட்டியை சேர்ந்தவர் முருகன் மகன் சந்துரு (25). நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். நடு இரவில் முருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, மகன் சந்துருவை எழுப்பியுள்ளார். ஆனால் சந்துரு அசைவின்றி இருந்துள்ளார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே சந்துரு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


