News March 30, 2026
தாயுமானவர் பொன்மொழிகள்!

*நல்லெண்ணம் வளர வளர அது நமது உடலில் ஊறியதாக ஆகிவிடுகிறது. பிறகு கெட்ட எண்ணம் என்பதே வருவதில்லை. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை பழக்கமே *ஒழுக்கத்தில் நிலைநின்றவர்களுக்கு மன உறுதி அதிகரிக்கிறது. பின்னர் அதுவே ஆத்ம சக்தியாக வடிவம் எடுக்கிறது *நல்ல மனதுக்கு உலகம் நல்லதாகவும், கெட்ட மனதுக்கு உலகம் கெட்டதாகவும் தென்படுகிறது *நல்ல எண்ணம் நமக்கு நல்ல நலம் தந்து, வாழ்வினை வளமடையச் செய்கிறது
Similar News
News April 11, 2026
கடையம்: மின்னல் தாக்கி ஒருவர் பலி

ஆழ்வார்குறிச்சி அருகே பரும்பு பகுதியை சேர்ந்தவர் சங்கரன் (55). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் வழக்கம் போல் ரயில்வே மேம்பாலம் அருகே வயல் பகுதியில் ஆடு மேய்க்க சென்றார். அப்போது திடீரென நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் அவர் மீது தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் உடலை மீட்டு தென்காசி GH-க்கு அனுப்பி வைத்தனர்.
News April 11, 2026
வானதி சீனிவாசன் ஹாஸ்பிடலில் அனுமதி

கால் வீக்கம் காரணமாக, கோவை வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் நேற்று தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், 48 மணிநேரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். இதனால், 2 நாள்களுக்கு அவரது பரப்புரை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொகுதியில் ஓய்வில்லாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததே இதற்கு காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News April 11, 2026
திருவிழா சாதியை பரப்புவதற்கு அல்ல: கோர்ட்

புதுக்கோட்டை கோயில் விழா ஒன்றின் அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயருடன் அச்சிடக்கோரிய மனு மீது மதுரை HC முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது. சாதி என்பது இல்லை; அது மக்களின் மனதில் மட்டுமே உள்ளது என கூறியுள்ளது. சமத்துவ சமுதாயத்தை மேம்படுத்தி சாதியை ஒழிப்பது மட்டுமே திருவிழாக்களின் நோக்கம் என்ற HC, திருவிழாக்கள் சாதியை பரப்புவதற்கான இடமாக மாறக்கூடாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.


