News May 19, 2024

அரியலூர்: மதுவிற்ற இருவர் கைது

image

உடையார்பாளையம் போலீசார் கீழவெளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது த.கீழவெளியை சேர்ந்த சுப்பிரமணி, கீழநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்த அரசகுமார் ஆகியோர் அப்பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் 2 பேரையும் கைது செய்து, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 8, 2026

அரியலூர்: ஆண்களை விட பெண்களே அதிகம்

image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2,60,565 ஆண் வாக்காளர்களும்; 2,65,799 பெண் வாக்காளர்களும்; 28 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தமாக 5,26,392 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே 5,234 பேர் அதிகம் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2026

அரியலூர்: வித்தியாசமாக தேர்தல் விழிப்புணர்வு!

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருபகுதியாக நேற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கேஸ் சிலிண்டகளில் “தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா, ஏப்ரல் 23 அன்று 100% வாக்களிப்போம், என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

News April 7, 2026

அரியலூர்: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு

image

அரியலூர் மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!