News May 19, 2024
ஆவடி: இளைஞர் புழல் சிறையில் அடைப்பு

ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (65). பிப்ரவரி மாதம் இவரை திருவள்ளூர் அருகே பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் (32) என்பவர் வீடு புகுந்து வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவானார். அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்த சரவணனை, திருமுல்லைவாயல் போலீசார் காவல் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதையடுத்து, மீண்டும் நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News November 17, 2025
JUST IN திருவள்ளூர்: பவாரியா கொள்ளை வழக்கில் தீர்ப்பு!

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் வரும் நவ.21ஆம் தேதி தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பவாரிய கொள்ளையர்களால் கடந்த 2005ஆம் ஆண்டு தானாகுளத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்த பவாரியா கும்பல் அவரை சுட்டுக் கொன்று வீட்டில் இருந்த 62 சவரன் நகையை கொள்ளையடித்தனர். அந்த வழக்கில் விசாரணை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
News November 17, 2025
திருவள்ளூர்: வங்கி அலுவலர் வேலை! APPLY NOW

திருவள்ளூர்: பேங் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, Msc, MA, MCA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். நவ.30 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News November 17, 2025
திருவள்ளூர்: AIMS நிறுவனத்தில் 1383 காலியிடங்கள்!

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., AIMS நிறுவனத்தில் காலியாகவுள்ள 1383 பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆவது தேர்ச்சி முதல் ஐடிஐ, டிகிரி, PG என அனைத்து தகுதிகளுக்கும் ஏற்ப பணிகள் உள்ளன. மாதம் ரூ.25,000 முதல் ரூ.1.51,100 வரை சம்பளம் வழங்கப்படும் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


