News May 19, 2024
கட்டுமான நலன், அறக்கட்டளை நிர்வாகிகள் பதவியேற்பு

கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான நலன் மற்றும் அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. கட்டுமான நலன் மற்றும் அறக்கட்டளை தலைவராக பாரத் வில்சன், செயலாளராக சஜிகுமாரும் பொருளாளராக ஜெபக்குமார் பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்சியில் நாகர்கோவில் மாநகராட்சி து.மேயர் மேரி பிரின்சிலதா கலந்து கொண்டார். இந்நிகழ்சியில் கட்டுமான நலன் (ம) அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 5, 2025
குமரி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 5, 2025
குமரி: அலைபாயுதே பாணியில் ஏமாற்றிய பெண்

ராமன்துறையை சேர்ந்த சஜினும்(35) – முள்ளூர்துறையை சேர்ந்த பிளஸ்சியும்(23) காதலித்து 2023-ல் ரகசியமாக திருமணம் செய்து அதை மறைத்து வாழ்ந்தனர். பெற்றோர் வீட்டில் இருந்த பிளஸ்சியை ரூ.12 லட்சம் செலவு செய்து கத்தாரில் வேலை செய்து சஜின் படிக்க வைத்தார். தற்போது முறைப்படி திருமணம் செய்ய பிளஸ்சி சம்மதிக்காமல் ஏமாற்றியதால் அவர் மீது குழித்துறை கோர்ட்டில் சஜின் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
News November 5, 2025
குமரி: முதன்மை கல்வி அதிகாரி மாற்றம்

குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியாக பணியாற்றிய பால தண்டாயுதபாணி, சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பதவி உயர்வு பெற்று, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக (C.E.O) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசு முதன்மை செயலாளர் அலுவலகம் பிறப்பித்துள்ளது.


