News May 19, 2024
வாழ்வாதாரத்தை இழக்கும் மணல் லாரி உரிமையாளர்கள்

லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் லோகநாதன் கூறியதாவது, அரசு நடத்திய மணல் குவாரிகள் மூடப்பட்டு 4 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இங்கு, 360 லாரிகள் மணல் விற்பனையை மட்டுமே நம்பி இயங்கி வந்தது. தமிழக அரசு மணல் குவாரிகளை விரைவில் கொண்டு வருவதாக கூறினாலும், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, மதுரை மாவட்டத்தில் விற்பனைக்கு மணல் இல்லாததால், தொழில் முடங்கி வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம்” என்றார்.
Similar News
News September 12, 2025
மதுரை: ரேஷன் கார்டில் பிரச்சனையா?..இது பண்ணுங்க

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நாளை (செப்.13) காலை 10 மணி முதல் பகல்1 மணி வரை சிறப்பு ரேஷன் குறைதீர் முகாம் நடக்கும். முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற ஏராளமான ரேஷன் சிறப்பு சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நல்ல தகவலை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 12, 2025
துணை ஜனாதிபதிக்கு மதுரை எம்பி வாழ்த்து

மதுரை துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மதுரை எம்பி வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்திய குடியரசின் நியதியை காக்க போட்டியிட்ட இந்திய கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு பாராட்டுக்கள். மாநிலங்களவையை ஜெகதீப் தன்கர் நடத்திய விதம் அநீதியானது. இறுதியில் தன்கர் நடத்தப்பட்ட விதம் அதைவிட அநீதியானது என்றும் பதிவிட்டுள்ளார்
News September 12, 2025
மதுரை மக்களே ஒரு SMS எல்லா பிரச்சனைக்கும் தீர்வு

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரியாதவர்களுக்கு SHARE செய்து உதவவும்.