News March 29, 2026
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர விழாவையொட்டி, ஏப்.1-ம் தேதி (புதன்கிழமை) தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய ஏப்.18 வேலைநாளாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. SHARE IT
Similar News
News April 9, 2026
₹10 கோடி முதலீட்டில் ₹100 கோடி லாபம் பார்த்த மீனா.. எப்படி?

நிலம், தங்கத்தில் முதலீடு செய்வதே தற்போதைய சிறந்த முதலீடு என்பதற்கு மீனா மிகப்பெரிய சாட்சியாக மாறியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் கடன் பெற்று ₹10 கோடி மதிப்பில் சென்னையில் ஒரு கலைநயமிக்க பங்களா கட்டியுள்ளார். இந்நிலையில், USA-வைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வீட்டை ₹100 கோடிக்கு மீனா விற்றுள்ளாராம். நவீன கட்டிடங்களின் நடுவில் பழமையான கலை நயத்துடன் கூடிய வீடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
News April 9, 2026
ஜெ.குரு பாமக திமுகவுக்கு ஆதரவு.. அன்புமணிக்கு ஷாக்!

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி, திமுகவுக்கு திடீரென ஆதரவளித்துள்ளது. அறிவாலயத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்த குருவின் மகள் விருதாம்பிகை திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்புமணியிடம் இருந்து தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால், அவர் தனது தந்தைக்கு செய்த துரோகம் காரணமாக அங்குச் செல்ல மனமில்லை என கூறினார்.
News April 9, 2026
தேர்தலில் கவனம் ஈர்க்கும் PINK பூத்

காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள 5 பிங்க் பூத்கள் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இந்த பூத்களில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்கள், போலீசார், உதவியாளர்கள் உள்பட அனைவருமே மகளிர்தான். வாக்குச்சாவடியின் நுழைவு முதல் வாக்காளர் அறை வரை பிங்க் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பெண் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும் இந்த முன்னெடுப்பை ECI செய்துள்ளது.


