News May 18, 2024
ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா

உலகில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததால், ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு மக்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 5 முதல் 11ஆம் தேதி வரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், 25,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் முகக்கவசம் அணியும்படி மக்களுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 28, 2025
முகூர்த்த தினம்.. கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு

ஆவணி மாதத்தில் அதிக முகூர்த்த தினங்கள் வருவதால், கூடுதல் டோக்கன்கள் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150, இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். அதிகளவில் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்கள், 12 தட்கல் டோக்கன்களோடு 4 கூடுதல் டோக்கன்களும் வழங்கப்படும்.
News August 28, 2025
ஜம்முவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இன்று அதிகாலையிலேயே நடந்த தீவிரவாத தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு & காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் ராணுவத்தினர் மற்றும் அம்மாநில போலீஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
News August 28, 2025
விஜய் கட்சியுடன் கூட்டணியா? முடிவில் மாற்றம்

மதுரை தவெக மாநாட்டுக்கு பின், விஜய்யை விமர்சித்த <<17535242>>பிரேமலதாவின் <<>>நிலைப்பாட்டில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், 20 சீட்டுக்கு மேல் கேட்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ‘கூட்டணி ஆட்சி’ என்ற மையப் புள்ளியை வைத்து, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க பிரேமலதா முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.