News May 18, 2024
அரைசதம் விளாசினார் டு பிளசி

CSK-க்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், RCB கேப்டன் டு பிளசி அரைசதம் விளாசினார். தொடக்கம் முதலே பொறுப்புடன் விளையாடி வந்த அவர், 3 Four, 3 Six என விளாசி அசத்தினார். இதனால் 35 பந்துகளில் 50* ரன்கள் அடித்த அவர், தனது 37ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். அவருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி, 47(29) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், RCB அணி 200+ ரன்களுக்கு மேல் அடிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News March 11, 2026
தமிழக தேர்தல் தேதி.. ECI சொன்ன புதிய தகவல்

அடுத்த 3 முதல் 5 நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக ECI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN, கேரளா, புதுவையில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 3 -4 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
News March 11, 2026
IPL-ல் ஆரம்பமே அமர்க்களமா இருக்கும் போலயே!

IPL போட்டிகள் மார்ச் 28-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் IPL Fever தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரசிகர்களை மேலும் ஹைப் ஏற்றும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது IPL முதல் போட்டியிலேயே RCB-ம் CSK-ம் மோதவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(மார்ச் 12) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 11, 2026
பச்சைத் துரோகம் செய்த இபிஎஸ்: ஐ.பெரியசாமி

மோடி அரசின் செயல்பாடு 100 நாள் வேலை திட்டத்தையே முற்றிலும் ஒழித்துக்கட்டும் முடிவில் இருப்பதையே காட்டுவதாக ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார். கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கும் புதிய சட்டத்தை ஆதரித்து EPS பச்சைத் துரோகம் செய்துவிட்டார் என சாடிய அவர், கிராமபுறத்தின் முதுகெலும்பை முறிக்கும் மோடி அரசின் வஞ்சகத்துக்கு துணைபோன EPS-க்கு மக்கள் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.


