News May 18, 2024
CSKvsRCB: போட்டி மீண்டும் தொடங்கியது

CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்கியது. 3 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மைதான ஊழியர்கள் கவர்கள் கொண்டு மைதானத்தை மூடினர். 15 நிமிடங்கள் தொடர் மழைக்கு பிறகு, மழை லேசாக குறைய தொடங்கியது. பின், முற்றிலும் மழை நின்றதால், போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. கோலி 19, டு பிளசி 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
Similar News
News March 11, 2026
நல்ல தூக்கம் வேணுமா… பாயில் படுங்க!

‘பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான கோரைப் பாயில் படுப்பது ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும். கர்ப்பிணிகள் பாயில் உறங்கினால், முதுகு & இடுப்பு வலி வராது. மேலும், பாயில் சமமாகப் படுக்கும்போது உடலில் ரத்தம் சீராகப் பாய்கிறது. இத்துடன், கோரைப் பாய் சூட்டை உள்வாங்கும் தன்மை கொண்டதால் உடல் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.
News March 11, 2026
BREAKING: எதிர்பாராத திருப்பம்.. புதிய கூட்டணி

TN அரசியலில் புதிய திருப்பமாக தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சசிகலா சந்தித்துள்ளார். 30 நிமிடங்களுக்கு மேலான இச்சந்திப்பில் தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், சசிகலாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளாரா என கேள்வி எழுகிறது. முன்னதாக, TVK-வுடன் சசிகலா கூட்டணி பேச்சு நடத்தியதாக தகவல் கசிந்தது.
News March 11, 2026
ஆண்களே இரவில் இதை பண்ணாதீங்க…

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நல்ல தூக்கத்துக்கு இரவில் ஆண்கள் உள்ளாடை இல்லாமல் தூங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்கள் நாள் முழுவதும் உள்ளாடையை அணிந்திருப்பதால் உடல் வியர்வை, வெப்பம் ஆகியவற்றைத் தேக்கி வைத்திருக்கும். இதனால் விதைப்பை அதிகமாக சூடாக வாய்ப்புள்ளதாம். அதனால் உள்ளாடையை தவிர்ப்பது நல்லதாம். SHAREIT


