News May 18, 2024
உணவு பொருளில் பூச்சி கொல்லி; அரசுக்கு நோட்டீஸ்

வேளாண் பயிர், உணவுப் பொருள்களில் அதிக அளவு பூச்சிக் கொல்லி மருந்து, உரங்கள் பயன்படுத்தப்படுவதால், மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து பதிலளிக்கக்கோரி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், சுகாதார அமைச்சகம், உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
Similar News
News August 28, 2025
No Helmet No Petrol… எங்கு தெரியுமா?

‘தலைக்கவசம் உயிர்கவசம்’ என்பதை வலியுறுத்தும் வகையில் உ.பி.யில் புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற பிரச்சாரத்தை அம்மாநில அரசு முன்னெடுத்துள்ளது. இது தண்டனை அல்ல, மாறாக வாகன ஓட்டிகளை சட்டத்தை கடைபிடிக்க எடுக்கப்பட்ட முயற்சி என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் ஊருக்கும் இது வேணுமா?
News August 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 441 ▶குறள்: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். ▶ பொருள்: அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
News August 28, 2025
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை? ஃபிஃபா எச்சரிக்கை

அக்டோபர் 30-ம் தேதிக்குள் புதிய விதிகளை அமல்படுத்தவில்லை என்றால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு(AIFF) தடை விதிக்கப்படும் என ஃபிஃபா எச்சரித்துள்ளது. கால்பந்து அமைப்புகள் தன்னிச்சையாக இயங்க வேண்டுமென ஃபிஃபா நினைக்க, இந்திய அரசு அதில் தலையிட நினைப்பதே பிரச்னைக்கு காரணம். ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2036-ல் அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் நிலையில், AIFF-க்கு தடை விதிக்கப்பட்டால் அது பாதிப்பாக அமையும்.