News May 18, 2024
கர்நாடகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் குண்டாஸில் கைது

ராணிப்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கஞ்சா கடத்தியதாக கர்நாடக மாநிலம் மாண்டியவை சேர்ந்த மதன் மற்றும் குமாரசாமியை கைது செய்தனர். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க எஸ்பி கிரண்ஸ்ருதி ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதிக்கு பரிந்துரை செய்திருந்தார். ஆட்சியர் உத்தரவின் பேரில் மதன் மற்றும் குமாரசாமி ஆகியோர் குண்டர் சட்டதில் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News April 20, 2025
நெமிலி அருகே நாய் கடித்ததில் 7 பேர் காயம்

நெமிலியை அடுத்த திருமால்பூரில் வெள்ளிக்கிழமை இரவு ஜஸ்வின் (14), கனிஷ் (14), தருண் (15) உள்ளிட்ட பல சிறுவர்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த போது தெரு நாய் கடித்துள்ளது. அதுபோல் வெவ்வேறு இடங்களில் 4 பேரை தெரு நாய் கடித்துள்ளது. இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நெமிலி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
News April 20, 2025
குழந்தை பாக்கியம் அருளும் ரத்தனகிரி பாலமுருகன் கோவில்

ராணிப்பேட்டை ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஒரு பழக்கம் உள்ளது. குழந்தை பாக்கியம் தரும் மிக புண்ணியமான தலமாக ரத்தினகிரி பாலமுருகன் கோவில் கருதப்படுவதால் முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளையும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர். இதனால் அன்னியோனியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
News April 19, 2025
ராணிப்பேட்டை: கவலைகள் மறைய இங்கு போங்க

ஒரு எரிமலை வெடித்த பின்னர் அந்த எரிமலைக் குழம்புகளே சிவலிங்கமாகவும் நந்தியாகவும் மாறிய மலைதான் ராணிப்பேட்டை, லாலாப்பேட்டை அருகேயுள்ள காஞ்சனகிரி. ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம் மலையிலுள்ள பாறையைத் தட்டிப் பார்த்தால் வெண்கல மணிச் சத்தம் வெளிப்பட்டு எதிரொலிக்கும். இந்த கோயிலுக்கு வந்தால் கஷ்டங்கள் தீர்ந்து கவலைகள் மறையும் என்பது நம்பிக்கை. கவலையில் இருக்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.