News May 18, 2024
இங்கிலாந்து அரண்மனையை ஆட்டிவிக்கும் புற்றுநோய்

இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, பட்டத்து இளவரசராக இருந்த அவரது மகன் சார்லஸ் 2022ஆம் ஆண்டு மன்னராக மகுடம் சூடினார். ஆனால், சில மாதங்களிலேயே அவர் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானார். தற்போது அவர் அதில் இருந்து மீண்டு வரும் சூழலில், அவரது மருமகள் கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்கால ராணியான அவர், புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார்.
Similar News
News August 28, 2025
விரைவில் தயாராகும் ‘கேப்டன் பிரபாகரன் 2’

‘கேப்டன் பிரபாகரன் 2’ படத்தை விரைவில் எடுப்பது குறித்து பரிசீலிப்பதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சண்முக பாண்டியன் அவரது தந்தை விஜயகாந்தை போலவே இருப்பதால், நடிப்பதால், அவரை வைத்தே 2-ம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆன ‘கேப்டன் பிரபாகரன்’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2k கிட்ஸும் அப்படத்தை வெகுவாக ரசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
News August 28, 2025
மோடி கங்கை நீர், ராகுல் ஊழல் குடும்பம்: பாஜக விமர்சனம்

குஜராத் மாடல் என்பது பொருளாதார மாடல் அல்ல, அது வாக்குறுதிப்படி மாடல் என ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்திருந்தார். இந்நிலையில், இதுபற்றி பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, மோடி கங்கை நீர் போன்று புனிதமானவர், ஆனால் ராகுல் காந்தியின் குடும்பம் ஊழல், பொய்கள் நிறைந்த குடும்பம் என சாடினார். சோனியா காந்தி, ராபர்ட் வதேரா, ராகுல் ஆகியோர் ஊழல் வழக்கில் ஜாமினில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
News August 28, 2025
ஒரு லட்சம் சேலைகளால் உருவான மெகா கணபதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் சேலைகளை கொண்டு விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். ஒரு லட்சம் சேலைகளை மடித்து அடுக்கி 111 அடி உயர சிலை வடிவமைத்துள்ளனர். இந்த விநாயகரின் பெயர் ‘சுந்தர வஸ்தர மகா கணபதி’. சேலைகளை சூரத், தமிழகம், மேற்கு வங்கத்தில் இருந்து பெற்றுள்ளனர். வழக்கமாக விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைப்பார்கள். இங்கு சேலைகளை பக்தர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளனர்.