News May 18, 2024
நெல்லை: புது மாப்பிள்ளை வெட்டிப் படுகொலை!

பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் நேற்று (மே 17) வழக்கம்போல் வேலையை முடித்துவிச்சு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். மணிக்கூண்டு அருகே சென்றபோது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இசக்கிமுத்துவிற்கு கடந்த மாதம் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 9, 2026
BREAKING மீண்டும் அரங்கேறிய நாங்குநேரி சம்பவம்

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே போதை ஆசாமிகள் இரண்டு பேரை படுகொலை செய்த நிலையில் நேற்று வீரவநல்லூர் அருகே போதை ஆசாமிகள் விவசாயி ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். வீரவநல்லூர் அருகே சக்தி குளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகன். இவர் நேற்று தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு வந்த போதைஆசாமிகள் அவரை வெட்டியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
News March 9, 2026
நெல்லை மாவட்ட காவல்துறையினரின் விளக்கம்

நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் நெல்சன் என்பவர் காயம் அடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் அவருடைய தாயார் இறந்ததாக சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் செய்தி பரவி வருகிறது. இது குறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில் வயது முதிர்வு காரணமாக நெல்சன் என்பவரின் தாயார் காலமானார் என்றும் எனவே வதந்தியை பரப்ப வேண்டாம் .
News March 9, 2026
திருநெல்வேலி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

திருநெல்வேலி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!


