News May 18, 2024
கண் பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம்

இந்தியர்களுக்கு தொற்று அல்லாத கண் பார்வை பிரச்னை அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக காற்று, புகை, வெயில் உள்ள இடங்களுக்கு செல்லும் போது கண்கள் வறண்டு விடும். அதிகளவில் செல்போன், கணினியைப் பயன்படுத்துவதும் கண்களைப் பாதிக்கும். இதை அலட்சியமாக விட்டால் நிரந்தரப் பார்வை இழப்பு ஏற்படும் என எச்சரிக்கும் மருத்துவர்கள், கண்களை ஈரப்பத்தோடு வைத்திருக்க அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News March 18, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவைக் கண்டுள்ளது. சென்னையில், இன்று(18.03.2026) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 குறைந்து ₹14,570-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,16,560-க்கு விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையான போர் பதற்றத்திற்கு மத்தியிலும் கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது கவனிக்கத்தக்கது.
News March 18, 2026
திமுக கூட்டணியில் மோதல் வெடித்தது

திமுக கூட்டணியில் வெளிப்படையாகவே மோதல் வெடித்துள்ளது. கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட குறைவான இடங்களை பெற்றுக்கொள்ளுமாறு திமுக தரப்பிலிருந்து தங்களிடம் சொன்னதாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிவிட்டதாகவும் CPM மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். அதேபோல், <<19412554>>திருமாவும்<<>> தொகுதிகளை குறைக்க முடியாது என கூறிவிட்டாராம். இதனால், திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 18, 2026
அரசியல் தலைவர்கள் மக்களை குழப்புவது நியாயமா?

தவெகவுக்கு டெல்லியிலிருந்து அழைப்பு வந்ததாக <<19412409>>ஆதவ் அர்ஜுனா பேசியது<<>> அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. காரணம், கடந்த ஒரு வாரமாக தவெகவுடன், NDA தரப்பு பேசி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அதனை EPS, நயினார், CTR நிர்மல் குமார் மறுத்திருந்தனர். இப்படி இருக்கையில், ஆதவ் பேசியது பொய்யா? (அ) தலைவர்கள் உண்மையை மறைத்து மக்களை குழப்புவது நியாயமா? என நெட்டிசன்கள் சாடுகின்றனர். உங்கள் கருத்து?


