News May 18, 2024
நீலகிரி: சீல் வைத்து ரூ.1,25,000 அபராதம்

ஊட்டியில் தடை செய்யப்பட்ட நிக்கோடின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சுரேஷுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நகரில் நடந்த சோதனையில், புகையிலை வைத்திருந்த கடைகளுக்கு நேற்று (மே 17) சீல் வைத்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.
Similar News
News August 23, 2025
நீலகிரி: நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு!

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி, துணை மின் நிலையங்களில் (ஆக.25) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. கோத்தகிரி, கப்பட்டி, உல்லத்தி, கேர்பென், குண்டாடா, ஓரசோலை, தட்டப்பள்ளம், குஞ்சப் பனை, கொணவக்கரை, தேனாடு, திம்பட்டி, கரிக்கையூர், கோயில்மட்டம், குல்லங்கரை, செம்மனாரை, கெரடாமட்டம், கோடநாடு, ஈளாடா, தேனாடு, ஓன்னட்டி, மஞ்சமலை, கரிக்கையூர், ஆகிய பகுதிகளில் இருக்காது. ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
நீலகிரி: வாழை தோட்டத்தை சேதம் செய்த காட்டு யானைகள்!

புளியம்பாறை பகுதி விவசாயிகள், ஓணம் பண்டிகைக்கு முன், வாழை தார்கள் அறுவடை செய்ய உள்ளனர். காட்டு யானைகள், நுழைவதை தடுக்க தோட்டத்தை சுற்றி சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் முகாமிட்ட காட்டு இரண்டு யானைகள், வாழை மரத்தை ஒன்றை, சோலார் மின் வேலி மீது சாய்த்து, மின் சப்ளை துண்டிக்கப்பட்வுடன், கம்பியை லாவகமாக கடந்து, தோட்டத்தில் நுழைந்து,வாழை மரங்களை சேதம் உட்கொண்டு சென்றுள்ளன.
News August 23, 2025
உப்பட்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

பந்தலூர் உப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. 8ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஓராண்டு அல்லது இரண்டாண்டு பயிற்சி பிரிவுகளில் சேரலாம். பயிற்சி முடித்ததும் உடனடியாக வேலை வாய்ப்பு பெறப்படும் என முதல்வர் தெரிவித்தார்.