News May 18, 2024
தொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் முயற்சி

மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளைக் கட்டுப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) விதிகளைக் கடுமையாக்கியுள்ளது. இது தொடர்பான விரிவான அறிவிப்பு வரும் மாதங்களில் வெளியாகும் என அறிவித்துள்ளது. ஏற்கெனவே விளம்பர அழைப்புகளுக்கு 160 சீரிஸ் கொண்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல, சேவை சார்ந்த அழைப்புகளுக்கு 140 சீரிஸில் தொடங்கும் எண்களை ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
தவெகவா? தனித்து போட்டியா? ராமதாஸ் யோசனை

தேர்தல் தேதியே அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, கூட்டணி குறித்த முடிவை ராமதாஸ் இதுவரை எடுக்கவில்லை. அதிமுக, திமுக கூட்டணி கதவு, அவருக்கு அடைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அடுத்த நகர்வு குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். இப்போதைக்கு தவெகவுடன் செல்வது (அ) தனித்து போட்டியிடுவது இந்த இரு வாய்ப்புகள் மட்டுமே ராமதாஸ் முன் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.
News March 19, 2026
தவெகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என தவெக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவளித்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை விஜய்யால் மட்டுமே கொடுக்க முடியும் என மனதார நம்புவதாக அக்கட்சியின் மாநில தலைவர் நாகூர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும், 234 தொகுதிகளிலும் தவெகவின் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 19, 2026
அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ள ஏ.சி. சண்முகம்

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் EPS பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பாஜகவுடன் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக EPS கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை NDA கூட்டணியில் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


