News May 18, 2024

உயிரிழந்தவரின் உடலை வாங்க 3-வது நாளாக மறுப்பு

image

கூடலூரை சோ்ந்த கிருஷ்ணகுமாா் கடந்த மே.15ஆம் அப்பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தின் முள் வேலியிலிருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதனையடுத்து இவரது உறவினா்கள் தோட்ட உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உடலை 3-வது நாளாக நேற்று வாங்க மறுத்தனா். இதுகுறித்து போலீசார் தோட்ட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News April 20, 2025

தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News April 20, 2025

ஏலக்காய் மாலை அணிவித்த தேனி மாவட்ட தலைவர்

image

திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருங்கோட்ட அளவிலான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பாஜக தலைவர் P.இராஜபாண்டியன் கலந்து கொண்டு மாநில தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பேராசிரியர் இராம ஶ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

News April 20, 2025

தேனி : இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

image

தேனி அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் தொழில் முனைவோர் பயிற்சி  21.04.2025 நாளை முதல் நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தி செய்த கிராமப்புற நபர்கள்  இதில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் தகவலுக்கு 9442758363 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .

error: Content is protected !!