News May 18, 2024
திருவள்ளூர்: மறுவாழ்வு முகாமில் 198 வீடுகள்

கும்மிடிப்பூண்டி உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 198 வீடுகள் கட்டப்பட உள்ளதை ஒட்டி பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், அமிழ்த மன்னன் உடன் இருந்தனர். மேற்கண்ட 198 வீடுகள் தலா 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 7, 2026
திருவள்ளூர் கலெக்டர் மீனவர்களுக்கு நல உதவி!

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பொன்னேரி வட்டம் மெதுர் கிராமத்தை சேர்ந்த 25 இருளர் பழங்குடியினர் இன மக்களுக்கு ரூ.1.84 லட்சம் மதிப்பீட்டில் இலவச மீன்பிடி வலை (கன்னி வலை மற்றும் மீன்பிடி தள்ளு வலை) ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினர்.
News March 7, 2026
திருவள்ளூர்: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

திருவள்ளூர் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News March 7, 2026
பள்ளிப்பட்டு: மது போதையில் நண்பனை கொன்றவர் கைது

திருவள்ளூர்: பள்ளிப்பட்டை சேர்ந்த மகேஷ்பாபு மற்றும் பிரகாஷ், நண்பர்கள். பிரகாஷுக்கு, கடந்தாண்டு ரூ.10,000 மகேஷ்பாபு கடனாக கொடுத்திருந்தார். நேற்று(மார்ச் 6) காலை இருவரும், பாழடைந்த தனியார் பள்ளி வளாகத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மகேஷ்பாபு, மீண்டும் பிரகாஷிடம் பணம் கேட்டுள்ளார். மதுபாட்டிலை உடைத்து, மகேஷ்பாபுவின் கழுத்தில் குத்தியுள்ளார். தகவலறிந்த போலீசார் பிரகாஷை கைது செய்தனர்.


