News May 17, 2024
நாளை 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்

தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
நாமக்கல்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேர ரோந்து பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாகக் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளுக்கான ஆய்வாளர்கள் மற்றும் வாகன ரோந்து அதிகாரிகளின் பெயர்கள், அவர்களின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
News March 6, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 6, 2026
‘US தாக்கினால் இந்தியாவை குறை சொல்ல முடியாது’

ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்று பாஜக தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். அவரது X பதிவில், இச்சம்பவம் இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 250 nautical miles தூரத்தில், சர்வதேச கடலில் நடந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச கடல் சட்டப்படி அந்த பகுதியில் நடந்த செயல்களுக்கு இந்தியாவுக்கு பொறுப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


