News May 17, 2024
24% மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம்

சமுதாயத்தில் 24% மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், 10% மக்களுக்கு ரத்த அழுத்தம் இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். அதிக உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிட்டால் ரத்த அழுத்த நோய் உருவாகும் என்றும், அதனைத் தவிர்க்க பருப்பு, பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், தினமும் 8 மணி நேர தூக்கம், 8 கி.மீ., நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Similar News
News March 5, 2026
மொத்தமாக ₹8,500 சம்பள உயர்வு.. இன்ப அதிர்ச்சி

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இதன்படி, <<19299732>>டாஸ்மாக்<<>> ஊழியர்களுக்கு மேலும் ₹1,000 சம்பளம் உயர்வு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக <<19242295>>₹2,500<<>> சம்பளம் உயர்வு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ₹5,000 உயர்த்தி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் அந்தந்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.
News March 5, 2026
வாழ்க்கை பிரகாசிக்க செய்யும் வெண்பூசணி வழிபாடு

புதுக்கோட்டை, திருமயம் என்னும் ஊரில் 350 ஆண்டுகள் பழமையான கோட்டை பைரவர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே வடக்கு பார்த்தபடி, தனிகோயில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே. இக்கோயிலில் மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு வெண்பூசணி விளக்கேற்றி வழிபடுவது, அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க உதவுமாம். பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் அபிவிருத்தி ஏற்படும்.
News March 5, 2026
காங்., – திமுக கூட்டணி.. மாணிக்கம் தாகூர் ரியாக்ஷன்

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தேவை என மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கூறி வந்த நிலையில், திமுக 3+1 சீட்களை கூடுதலாக ஒதுக்கி காங்.,-ஐ கூட்டணியில் தக்கவைத்து கொண்டுள்ளது. இந்நிலையில், தலைமையின் முடிவை ஏற்பதாக X பதிவில் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், பொம்மை காரை கையில் வைத்துள்ள சிறுவன், BMW காரை ஏங்கி பார்ப்பது போன்ற போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில், கண்டிப்பாக ஒருநாள் ஆசை நிறைவேறும் என்ற வாசகம் உள்ளது.


