News May 17, 2024
39% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

நாடு முழுவதும் நான்கு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்த 3 கட்ட வாக்குப்பதிவுகள் மே 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், மே 25இல் நடைபெறும் ஆறாவது கட்டத் தேர்தலில், மொத்தம் 866 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 338 பேர் (39%) கோடீஸ்வரர்கள் என்பது அவர்களது வேட்புமனு மூலமாக தெரிய வந்துள்ளது. அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ₹6.21 கோடியாக உள்ளது.
Similar News
News October 14, 2025
சிறப்பு மிக்க கோயில்கள்… PHOTOS

இந்தியாவிலேயே அதிக கோயில்கள் தமிழகத்தில் தான் உள்ளன. இங்குள்ள கோயில்களின் கட்டட அமைப்பே அதன் வரலாறை கூறும். பார்ப்பவர்களையும் வியக்க வைக்கும். அதனால் பிற மாநிலங்களின் சிறப்பு மிக்க கோயில்கள் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக வித்தியாசமான கட்டடக் கலை உடைய சில கோயில்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இவை சுற்றுலாவுக்கும் சிறந்த இடமாகும். மேலே இருக்கும் போட்டோக்களை SWIPE செய்து பாருங்க!
News October 14, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு புதிய தகவல்

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, மகளிர் உரிமைத் தொகை பெற்று வருவோருக்கு இந்த தொகை கிடைக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இதற்கும் பொங்கல் பரிசிற்கும் தொடர்பில்லை என்பதால், அவர்களுக்கும் பணம் கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பொருளில்லா ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ₹5,000 கிடைப்பது சந்தேகம்தான். SHARE IT
News October 14, 2025
தனித்துவ விவசாய அடையாள அட்டை பெறுவது எப்படி?

PM கிசான் திட்டத்தின் ₹6,000 உதவித்தொகை பெற விவசாயிகள் ‘தனித்துவ விவசாய அடையாள அட்டை’ வைத்திருப்பது கட்டாயமாகும். இந்த ID அட்டை பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், சமீபத்திய கணினி சிட்டா ஆவணங்களுடன் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வேளாண்மை துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். அப்போது வழங்கப்படும் தனித்துவ அடையாள எண் அடிப்படையிலேயே விவசாய திட்டங்களின் பயன்களை பெற முடியும்.