News May 17, 2024
முன்னாள் கவுன்சிலர் மகன் கைது!

தலைவாசல் அருகே புனல் வாசலை சேர்ந்தவர் துரைராஜ். இவர் நேற்று முன்தினம் அம்மம்பாளையத்தில் இருந்து, ஆத்தூருக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பெருமாள், அவரது மகன் அரவிந்த் ஆகியோர் பைக்கில் வந்து தகராறு செய்து, ஜாதி பெயரை கூறி தாக்கியுள்ளனர். துரைராஜ் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று அரவிந்தை கைது செய்தனர். பெருமாளை தேடி வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
சேலம் அவசர எண்கள் அறிவித்தார் கலெக்டர்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கிழே உள்ள எண்களுக்கு அழைக்கலாம என சேலம் கலெக்டர் அறிவிப்பு: கெங்கவல்லி – 04272451943,ஆத்தூர்- 04282-251400, ஏற்காடு -04292-223000,ஓமலூர்-04290-220224,மேட்டூர்-04298-244063, எடப்பாடி-0427-2450026,சங்ககிரி 04283-240242, வீரபாண்டி-0427-2904666, சேலம் மேற்கு-0427-2212844,சேலம் வடக்கு-0427-2212844,சேலம் தெற்கு
0427-2461616!SHAREit
News November 5, 2025
சேலத்தில் அதிரடி மாற்றங்கள்!

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த வந்த கபீர், சென்னைக்கும், நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, சேலத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தவிர சேலம் மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி(தொடக்க கல்வி), பதவி உயர்வில், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மக்களின் சமூக வலைதள பாதுகாப்பை உறுதிசெய்ய, தங்கள் முகநூல் (Facebook) கணக்கில் Profile Lock செய்வது அவசியம் என சேலம் காவல்துறை தெரிவித்துள்ளது. இது மூலம் அறிமுகமில்லாத நபர்கள் உங்கள் புகைப்படம், தகவல் போன்றவற்றைப் பெற முடியாது. தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க அனைவரும் உடனே ‘Lock’ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


