News May 17, 2024

முன்னாள் கவுன்சிலர் மகன் கைது!

image

தலைவாசல் அருகே புனல் வாசலை சேர்ந்தவர் துரைராஜ். இவர் நேற்று முன்தினம் அம்மம்பாளையத்தில் இருந்து, ஆத்தூருக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பெருமாள், அவரது மகன் அரவிந்த் ஆகியோர் பைக்கில் வந்து தகராறு செய்து, ஜாதி பெயரை கூறி தாக்கியுள்ளனர். துரைராஜ் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று அரவிந்தை கைது செய்தனர். பெருமாளை தேடி வருகின்றனர்.

Similar News

News December 28, 2025

BREAKING: ஓமலூர் EX எம்எல்ஏ நீக்கம்: இபிஎஸ் அதிரடி

image

அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி சி.கிருஷ்ணன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அண்மையில் தவெக முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியதாகவும், குறிப்பாகச் செங்கோட்டையனை சந்தித்துத் தவெகவில் இணைந்ததாக புகைப்படங்கள் கசிந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

News December 28, 2025

சேலம்: பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY…!

image

சேலம் மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/-மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். <>விண்ணப்பிக்க க்ளிக் <<>>செய்யுங்க. மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க.

News December 28, 2025

சேலத்தில் சம்பவ இடத்திலேயே பலி!

image

சேலம் பள்ளப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (கூலித் தொழிலாளி). இவர் வேலைக்குச் செல்வதற்காக பள்ளப்பட்டி மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, எதிர்பாராதவிதமாக பார்த்திபன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பார்த்திபன் உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீசார், உடலைக் கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!