News May 17, 2024
பெரம்பலூர்: மழைக்கு வாய்ப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பெரம்பலூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 30, 2025
பெரம்பலூர்: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

பெரம்பலூர், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.
News December 30, 2025
சொர்க்க வாசல் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மரகத வள்ளி தாயார் சமேத மதனகோபால் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தார். மேலும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள் உடன் இருந்தார்.
News December 30, 2025
பெரம்பலூர்: 10th போதும்-போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


