News May 17, 2024
ஆதிதிராவிடர் பள்ளி மாணவனுக்கு ஆட்சியர் பரிசு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், +2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர்களுக்கான “என் கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று (17.05.2024) நடைபெற்றது. இதில் +2 தேர்வில் 563 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற ஈஞ்சம்பாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவன் கணேஷ்குமார்-க்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
Similar News
News September 16, 2025
காஞ்சிபுரம்: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

காஞ்சிபுரம் மக்களே!மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200 மற்றும் TOLL FREE NO-1930 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்
News September 16, 2025
காஞ்சிபுரம் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

காஞ்சிபுரம், செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 19ம் தேதியன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கவுள்ளனர். (SHARE)
News September 16, 2025
காஞ்சிபுரத்தில் கரண்ட் கட்!

காஞ்சிபுரம், நீரவள்ளூர் துணைமின் நிலையத்தில் நாளை (செப்.,17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் நீர்வள்ளூர், சின்னையன் சத்திரம், ராஜகுளம், தொடுர், மேல்மதுரமங்களம், கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சின்னிவாக்கம், மருதம், பரந்தூர், சிறுவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE)