News May 17, 2024
24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 17, 2025
ஆப்கன் அடி தாங்காமல் டிரம்பிடம் சரணடைந்த பாக்.,

ஆப்கன் உடனான போரை தீர்த்து வைக்க டிரம்ப் முன் வந்தால், அதை மனமுவந்து வரவேற்பதாக பாக்., பாதுகாப்பு அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார். முந்தைய அமெரிக்க அதிபர்கள் போர் வெறியர்களாக இருந்ததாகவும், டிரம்ப் மட்டும் அமைதியின் திருவுருவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆப்கன் அமைச்சரின் இந்திய பயணத்தை சுட்டிக்காட்டி, இந்தியா சொல் கேட்டு தான் ஆப்கன் போரில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
News October 17, 2025
சாக்ரடீஸ் பொன்மொழிகள்

*உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதே உண்மையான ஞானம். *வீழ்வது தோல்வி அல்ல. வீழ்ந்த இடத்திலேயே வீழ்ந்தே கிடக்கும் போது தான் தோல்வி வரும். *இந்தப் பிரபஞ்சம் கோழைகளுக்கு சாதகமாக இருக்காது. *எல்லாப் போர்களும் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகவே நடத்தப்படுகின்றன. *திடீரென்று மாறும் ஒருவருக்காக கவலைப்படாதீர்கள். அவர் தனது நடிப்பைக் கைவிட்டு, தனது உண்மையான சுயத்திற்குத் திரும்பியிருக்கலாம்.
News October 17, 2025
கர்நாடகாவில் அரசு இடங்களில் RSS-க்கு தடை

பள்ளிகள், கல்லூரிகள் என அரசுக்கு சொந்தமான இடங்களில் RSS நிகழ்ச்சியை தடை செய்ய கர்நாடகா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பள்ளி குழந்தைகள் சிந்தாந்த ரீதியில் தூண்டப்படுவதாக வந்த புகார்கள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார். மேலும், RSS நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.