News May 17, 2024
ஆல் இந்தியா ரேடியோவில் சென்சார்

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவில் இஸ்லாமியர், சர்வாதிகார ஆட்சி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில், பேட்டி அளிக்கும்போது, திவால் அரசு, கொடூர சட்டங்கள் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்க்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறினார்.
Similar News
News December 27, 2025
இந்தியர்களை அதிகமாக நாடு கடத்தியது இந்த நாடு தான்!

சட்டவிரோத குடியேற்றம், முறையான அனுமதியின்றி பணிபுரிதல், குற்றச்செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல காரணங்களால் பிறநாடுகளில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். 2025-ல், 81 நாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், முதலிடத்தில் சவுதி அரேபியாவும் (11,000 பேர்), 2-வது இடத்தில் USA-வும் (3,800 பேர்) உள்ளன.
News December 27, 2025
ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு.. புதிய அப்டேட்

அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2026 பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்புடன் ரொக்கமும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2.20 கோடி ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளதாம். இதனால் விரைவில் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 27, 2025
சிலர் விவசாயி வேடம் போட்டு ஏமாற்றுகின்றனர்: CM

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சிலர் விவசாயி வேடம் போட்டு, விவசாயிகளையே கொச்சைப்படுத்துவதாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் செயல்படுத்திய விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட CM, 20 லட்சம் விவசாயிகளுக்கு ₹1,731 கோடி நிவாரணம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். திருவண்ணாமலையில் ₹3 கோடிக்கு சிறப்பு கிடங்கு அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.


