News March 24, 2026

வங்கிக் கணக்கில் பணம்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

image

EPFO-வில் உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமார் ₹5,200 கோடி நிதியை சம்பந்தப்பட்டோரின் வங்கிக் கணக்கில் தானாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 55 வயதை கடந்த ஓய்வு பெற்றவர்களின் EPFO கணக்குகள் 3 ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல் இருந்தால் அவை செயலற்ற கணக்குகளாக கருதப்படும்.

Similar News

News April 8, 2026

திண்டிவனத்தில் திண்டாடும் மக்கள்!

image

விழுப்புரம்: திண்டிவனம் – சென்னை சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. திண்டிவனம் நகராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிப்பதற்கு போதுமான இடம் இல்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதால், உரிய நடவடிக்கைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

News April 8, 2026

இராம்நாடு: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை

image

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் சிறுமியை அசோக்குமார் (37) என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், அசோக் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.

News April 8, 2026

எடப்பாடி TVK வேட்புமனு தள்ளுபடி.. KAS கடும் அதிர்ச்சி!

image

எடப்பாடியில் EPS-க்கு எதிராக செங்கோட்டையன் நிறுத்திய அருண்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம், EPS-ஐ அரசியல் எதிரி, துரோகி என கடுமையாக விமர்சனம் செய்து வரும் அவர், எடப்பாடி தொகுதியில் EPS நிச்சயம் தோல்வியடைவார் என சவால் விட்டிருந்தார். தற்போது அந்த தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

error: Content is protected !!