News May 17, 2024

பொருள்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை

image

பொது விநியோக திட்டம் தொடா்பாக துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளா் ஹா்சஹாய் மீனா தலைமை வகித்தாா். அப்போது, பேசிய அவர் ரேஷன் பொருட்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் இதில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Similar News

News August 13, 2025

கோவையில் பாலியல் தொழில்: இருவர் கைது

image

கோவை மாநகர் பகுதியில் தொடர் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநக காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் இன்று பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ராம் நகரில் உள்ள பிரகாஷ் லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குணசீலன் (51). உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி (34). ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 13, 2025

கோவை: மத்திய அரசு வேலை வேண்டுமா?

image

கோவை மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் காலியாகவுள்ள 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.21,700 முதல் 69,100 சம்பளம் வழங்கப்படும். இதற்கான எழுத்து தேர்வு கோவையில் நடைபெறும். <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு பணி கிடைக்க சூப்பர் சான்ஸ் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 13, 2025

வேரில் உதித்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள்

image

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த 55 வயது யூ.எம்.டி. ராஜா, காந்திபுரத்தில் நகை பட்டறை நடத்தி வரும் ஒரு கலைஞர். இவர், சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ஒரு தனித்துவமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார். ஒரு மரத்தின் ஆணிவேரைக் கொண்டு, அதில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட 20 முக்கியத் தலைவர்களின் உருவப்படங்களை மிக நுட்பமாகச் செதுக்கியுள்ளார்.

error: Content is protected !!