News May 17, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கரூர், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் குடை மற்றும் ரெயின் கோட் எடுத்து செல்வது நல்லது.
Similar News
News March 16, 2026
தனிநபர் விமர்சனத்தை தவிர்க்கவும்: மு.க.ஸ்டாலின்

பரப்புரையின்போது தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் என்று திமுக மா.செ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 5 ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டும் என்றும், கடந்த தேர்தல்களில் வாக்குகள் குறைவாக பெற்ற இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி கட்சியினருடன் திமுகவினர் இணைந்து செயல்படவும் ஆலோசனை கூறியுள்ளார்.
News March 16, 2026
தேர்தல்: மதுபான கடை நேரம் குறைப்பு

புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், மதுபான கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் குடோன்களில் இருந்து காலை 10 – மாலை 5 மணி வரை மட்டுமே மதுபானங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும் கலால் துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக இரவு 11 மணி வரை மதுக்கடைகளும், 12 மணி வரை ரெஸ்ட்டோ பார்களும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2026
ஆணவக் கொலைக்கு எதிராக கர்நாடக அரசின் மசோதா!

ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றும்படி பல ஆண்டுகளாக TN-ல் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி KN பாஷா தலைமையில் ஆணையம் மட்டுமே திமுக அரசால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆணவக் கொலையை கடும் குற்றமாக கருதி ’Iva Nammava’ மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆணவக் கொலை செய்தோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையை இம்மசோதா பரிந்துரைக்கிறது. இதுகுறித்து உங்க கருத்து என்ன?


