News March 23, 2026
தமிழகத்தில் ₹161 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்

TN முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ₹30.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ₹72 லட்சம் மதிப்பிலான மதுபானம், ₹6.4 கோடிக்கு போதைப் பொருள்கள், ₹92 கோடி மதிப்பிலான தங்கம் & வெள்ளி உலோகங்கள், ₹22 கோடி மதிப்பிலான இலவச பொருள்களோடு ரொக்கத்தையும் சேர்த்தால் ஒட்டுமொத்த மதிப்பு ₹161.9 கோடி ஆகும். இதில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரொக்கம், நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News April 6, 2026
தஞ்சை திமுக மேயர் ராஜினாமா

தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேயர் முடிய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளராக சண்.ராமநாதன் களமிறங்கியுள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கெனவே, நாகர்கோவில் மேயர் மகேஷ் பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News April 6, 2026
FLASH: அமீர் வீட்டில் IT அதிகாரிகள் சோதனை

சென்னையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய <<19578024>>ஜாபர் சாதிக்கை<<>> தொடர்ந்து இயக்குநர் அமீர் வீட்டிலும் IT அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, ₹2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்தபோது, அது தொடர்பாக இயக்குநர் அமீரிடம் ED அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
News April 6, 2026
மக்களுடன் இருப்பதே மகிழ்ச்சி: டி.ஜெயக்குமார்

ராயபுரம் தொகுதியில் வீடு வீடாக சென்று டி.ஜெயக்குமார் வாக்கு கேட்டு வருகிறார். மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், கடந்த 5 ஆண்டுகால திமுக அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். இதன்பின் பேசிய அவர், ராயபுரம் தொகுதி மக்களின் வரவேற்பிலும், பாசத்திலும் நெகிழ்ந்து போகிறேன் என்றும், எப்போதும் தனது தொகுதி மக்களுடன் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் உருக்கமாக தெரிவித்தார்.


