News May 17, 2024
நள்ளிரவில் நேர்ந்த துயர சம்பவம்!

மதுரை மதிச்சியம் சப்பானி கோவில் தெரு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியம் (30) என்பவர் வழக்கம் போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று இரவு பெய்த மழையினால் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பாலசுப்ரமணியன் மீது கட்டிட சுவர் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி மதிச்சியம் போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 1, 2025
மூத்த தமிழறிஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தமிழுக்கும் தமிழ் துறைக்கும் மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றிய வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. நடப்பாண்டில் 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இத்திட்டத்தின் கீழ் ரூ.8000 உதவித்தொகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. 2025-2026 ஆண்டிற்கான விண்ணப்பங்களை மதுரை ஆட்சியர் அலுவலக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
News November 1, 2025
மதுரை: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்..

மதுரை மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்த 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
News November 1, 2025
மதுரை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


