News May 17, 2024
தேனி: காவல் ஆய்வாளர் திடீர் மரணம்

தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் நடேசன். இவர் தனது சொந்த ஊர் சீலையம்பட்டியில் புதிய வீடு கட்டி புதுமனை புகுவிழா வைத்திருந்தார். இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திடீரென உயிரிழந்த காரணத்தால் அப்பகுதி சீலையம்பட்டி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 13, 2025
நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மனு அளித்த நிர்வாகிகள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் முன்பும், அரசு மருத்துவமனை முன்பும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு சாதகமற்ற ஆபத்தான சூழ்லில் உள்ளது. இதனை உடனே சரி செய்யக்கோரி உத்தமபாளையம் நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நகர தலைவர் சகுபர் சாதிக் தலைமையில் உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனுவை நிர்வாகிகள் அளித்தனர்.
News August 13, 2025
தேனியில் சிறுமி உயிரிழப்பு

கூடலுார் பகுதியை சேர்ந்த அரவிந்தனின் மகள் சிவானி (11). பள்ளி மாணவியான இவர் அதே பகுதியில் உள்ள இவரது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். நேற்று முன் தினம் பாட்டி வீட்டில் உள்ள சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிறுமி விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டில் சிறுமி கழுத்தை இறுக்கியது. இதில் சிறுமி உயிரிழந்தார். இதுக்குறித்து கூடலுார் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News August 13, 2025
தேனி: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 அரசு மானியம்….APPLY!

தேனிவாசிகளே! தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. இந்த இணையதளத்தில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் உறுப்பினராக பதிவு செய்த பின்னர் அதில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!