News May 17, 2024
கற்போம் திட்டம்: மாணவர்களுக்கு வாய்ப்பு

“தொடர்ந்து கல்வி கற்போம்” திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத, பள்ளி படிப்பை பாதியில் முடித்த மாணவர்கள் விவரம் நெல்லை மாவட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டது. இதில் சுமார் 2000 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து கல்வி கற்போம் திட்டத்தில் சேர்ந்து பயனடைய பாளை மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தேவையான சிறப்பு பயிற்சி அளித்து துணைத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
Similar News
News August 14, 2025
நெல்லை: பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை

கன்னியாகுமரியைச் சேர்ந்த தலைமை காவலர் சசிகுமார்(45), பாளையில் 15 வயது மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக கைது செய்யப்பட்டார். மாணவி பள்ளியில் “குட் டச், பேட் டச்” வகுப்பில் இது குறித்த உண்மையை வெளிப்படுத்தினார். பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஒன்ஸ்டாப் சென்டருக்கு தகவல் சென்று, புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் போலீசார் சசிகுமாரை கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது
News August 14, 2025
நெல்லை: நிதி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாவட்டத்தில் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைப்பது வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விலைப் பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்து சந்தை அணுகுதலை எளிதாக்குதல் & விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த வேளாண்மை உள் கட்டமைப்பு நிதி வழங்கப்படுகிறது. விவசாயிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிப்பு. *ஷேர்
News August 14, 2025
நெல்லையில் அரசு வேலை வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட வருவாய்த்துறையில் 37 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க கடைசி நாள் 16-08-2025. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். *நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.