News May 17, 2024

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

image

கோடை கால கூட்ட நெரிசலை குறைக்க, சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயிலில், நாளை (17.5) முதல் வரும் 23ம் தேதி வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும்.
அதேபோல், திருவனந்தபுரம் – மதுரை ரயிலில் இன்று (16.5) முதல் வரும் 21ம் தேதி வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

Similar News

News September 12, 2025

ரயில் பாதைகள் மின்சார பாதைகளாக மாற்றம்

image

மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பிரிவு தவிர மற்ற அனைத்து ரயில் பாதைகளும் ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டுவிட்டன. ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பாதையை மின் மயமாக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த புதிய மின் பாதையில் நாளை (செப் 13) முதன்மை தலைமை மின்சார பொறியாளர் கணேஷ் ஆய்வு நடத்த இருப்பதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

News September 12, 2025

எடப்பாடி பழனிசாமி மதுரை வருகை

image

மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் தாயார் மீனாள் அம்பாள் மறைவையொட்டி அவரது திருவுருவப் படத்தை நாளை மறுநாள் (செப்.14) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் அம்மா கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

News September 12, 2025

மதுரையில் திருநங்கை திடீர் தற்கொலை..!

image

மதுரை அஹிம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை இசக்கிமுத்து (எ) தீபிகா 29. இவர் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்லும் இசக்கிமுத்து (எ) தீபிகா நேற்று வீட்டிற்கு வந்தபோது சரிவர யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அடுத்த சிறிது நேரத்தில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!