News May 17, 2024
இந்தியாவே தேர்தல் முடிவை திரும்பி பார்க்கும்

ஆந்திராவில் 151 எம்எல்ஏ, 22 எம்பி இடங்களில் YSRCP வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள், இந்தியாவுக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும் என்ற அவர், கடவுள் அருளால் கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெறுவோம் என்றார். ஆந்திராவில் 25 மக்களவை மற்றும் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.
Similar News
News October 31, 2025
மணல் கொள்ளை வழக்கு: ED-க்கு ஐகோர்ட் கேள்வி

TN-ல் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக ED தொடர்ந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, மணல் கொள்ளை தொடர்பான தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிய TN DGP-க்கு எப்படி உத்தரவிட முடியும் என ED-க்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மணல் குவாரிகளில் ₹4,730 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதற்கு ஆதாரம் உள்ளதாக ED தெரிவித்த நிலையில், 3 வாரங்களில் பதிலளிக்க TN அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News October 31, 2025
பொங்கல் பரிசாக ₹5,000?… அமைச்சர் குட் நியூஸ்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணியிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, CM ஸ்டாலின் இதுகுறித்து அறிவிக்க இருப்பதாக மகிழ்ச்சியான தகவலை அவர் தெரிவித்துள்ளார். இதனால், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
News October 31, 2025
பிஹாரிகளை தமிழக மண் காப்பாற்றுகிறது: RS பாரதி

பிஹார் மக்களை தமிழக மண் காப்பாற்றுவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சொந்த மாநிலத்திலேயே ஒழுங்காக வேலை கொடுத்திருந்தால் பிஹார் மக்கள் ஏன் தமிழகத்திற்கு வரப்போகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழகம் வளமாக இருப்பதால் தான் பிஹார் மக்கள், இங்கே வருவதாகவும் அவர் பேசியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் பிஹார் மக்களை திமுக அரசு துன்புறுத்துவதாக PM மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.


