News May 16, 2024

ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

image

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்

Similar News

News December 27, 2025

திருப்பூர் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

திருப்பூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

IAS அதிகாரிகளுக்கு வார்னிங்

image

2026, ஜன.31-க்குள் அசையா சொத்து விவரங்களை சமர்ப்பிக்க தவறும் IAS அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. 2017-ல் இருந்து IAS அதிகாரிகளின் சொத்து விவரங்கள் இணையவழியில் பெறப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட கால அவகாசத்தில் சொத்து விவரங்களை பதிவேற்றம் செய்யும் IAS அதிகாரிகளுக்கு மட்டுமே ஊதிய உயர்வு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

News December 27, 2025

விஜய் உண்மையான தளபதி, மற்றவர்கள் வெட்டி தளபதி: KAS

image

2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெல்லும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் பேசிய அவர், பல விவகாரங்களுக்கு விஜய் வாய் திறப்பதில்லை என சிலர் விமர்சிக்கின்றனர்; ஆனால், நேரம் வரும்போது அவர் பேசுவார் என்று குறிப்பிட்டார். படைக்குத் தலைமை வகிப்பவர், வென்று நாட்டை ஆள்பவரே தளபதி என்று கூறிய அவர், விஜய் தான் உண்மையான தளபதி எனவும், மற்றவர்களெல்லாம் வெட்டி தளபதி என்றும் விமர்சித்தார்.

error: Content is protected !!