News May 16, 2024

இலங்கை மீனவர்கள் 14 பேர் ஐந்து படகுடன் கைது

image

இந்திய கடல் எல்லை பரப்பில் மீன்பிடித்த இலங்கை பருத்தித் துறை பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர். வேதாரண்யம் அருகே இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இந்திய எல்லைக்குள்
ஐந்து படகு மூலம் கடல் அட்டைகளைப் பிடித்த இலங்கை மீனவர்களை கண்டு அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தது.

Similar News

News December 24, 2025

நாகை: குறைகள் கேட்டறிந்த எஸ்பி!

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(டிச.24) நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர்
சு. செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 10 மனுக்களை பெற்ற அவர், பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

News December 24, 2025

நாகை: டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

image

பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.50,000 கடன் உதவி வழங்குகிறது. மேலும் கடனுக்கான முதல் தவணையைச் செலுத்தத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். மேலும் அறிய நாகை மாவட்ட சமுக நல அலுவலரை அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.(தொடர்ச்சி)

News December 24, 2025

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள் (2/2)

image

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்புபவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறுதொழிலாக இருக்க வேண்டும். வங்கிகளில் சென்று விண்ணப்பித்த பிறகு, ஆய்வு செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!